Connect with us

தமிழ்நாடு

ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் வங்கிகளுக்கு அபராதம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Published

on

ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ள வசதியாக ஏடிஎம்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவசர தேவைக்கு பணம் எடுக்க ஏடிஎம் செல்லும் போது சில சமயம் ஏடிஎம்களில் பணம் இல்லாத காரணத்தினாலும், தொழில்நுட்ப கோளாறு காரணத்தினாலும் பணம் எடுக்க முடியாத நிலை வாடிக்கையாளருக்கு ஏற்படுகிறது.

இதனால் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியவில்லை என்ற ஆதங்கம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு முடிவு கொண்டுவர ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த விதி அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரவிருப்பதாகவும் ஒரு மாதத்தில் ஏடிஎம் இயந்திரம் மொத்தமாக பத்து மணி நேரம் பணம் இல்லாமல் இருந்தால் ரிசர்வ் வங்கி சம்பந்தப்பட்ட வங்கி அபராதம் விதிக்கும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஏடிஎம்களில் பணம் இல்லாமல் போவதால் அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அனைத்து வங்கிகளும் தாங்கள் பராமரித்து வரும் ஏடிஎம்களில் சரியான நேரத்தில் பணத்தை நிரப்ப வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து இனி அனைத்து ஏடிஎம்களும் முறையாக பராமரிக்கப்பட்டு பணம் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)