தமிழ்நாடு
அரசாணை வெளியிட்டும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத அதிகாரிகள்: நடவடிக்கை உறுதி என தகவல்!
அரசாணை வெளியிட்டும் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டுமா என்பது குறித்த வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த நீதிமன்றம் தமிழ் தாய் வாழ்த்து என்பது தேசிய கீதம் கிடையாது என்றும், அதனால் அந்த பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு தமிழ் தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக தேர்வு செய்தது என்பதும் இதனை அடுத்து அரசு விழாக்களில் இந்த பாடல் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என்றும் அரசாணை பிறப்பித்தது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற அரசு விழா ஒன்றில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் தமிழ்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்கவில்லை. இதுகுறித்து வீடியோ வைரல் ஆனதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாகவே தாங்கள் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்கவில்லை என்றும் விளக்கமளித்தனர்.
தமிழ்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தும் அவர்கள் இவ்வாறு செய்ததை அடுத்து இது குறித்த வீடியோவை புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கக்பட்ட போது எழுந்து நிற்காமல் அலட்சியம் செய்த அலுவலர்கள் ???????? pic.twitter.com/vydUrjosym
— கல்கி குமார் (@kalgikumaru) January 26, 2022