தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி தேர்வு: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என உயர்நீதிமன்றம் உத்தரவு

Published

on

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 சதவீத இட ஒதுக்கீடு என தமிழக அரசு சமீபத்தில் மசோதா அமல்படுத்தியது. இந்த இட ஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வந்த கோரிக்கை நிறைவேறியது.

அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து மதுரையை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வ்ழக்கு தொடுத்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இதுகுறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி பணியிடங்களில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி படித்தவர்களுக்கு மட்டும்தான் இட ஒதுக்கீடு 20% கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version