தமிழ்நாடு

கூட்டணி வென்றால் நான்தான் முதல்வர்: திட்டவட்டமாக கூறிய ரங்கசாமி

Published

on

எங்கள் கூட்டணி வென்றால் யார் முதல்வர் என்ற குழப்பம் தேவை இல்லை என்றும் நான் தான் முதல்வர் என்று முன்னாள் புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை மாநிலத்தில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் பாஜக மற்றும் அதிமுக இருந்து வரும் நிலையில் இந்த கூட்டணி வெற்றி பெறும் என்று ஒருசில கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் எங்கள் கூட்டணி வென்றால் நான் தான் முதல்வர் என்பதில் எந்தவித குழப்பமும் இல்லை என்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும் நான் முதல்வராவேன் ரங்கசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பின் பார்த்துக்கொள்ளலாம் என ஏற்கனவே பாஜக முடிவு செய்திருக்கும் நிலையில் தற்போது நான் தான் முதல்வர் என ரங்கசாமி திட்டவட்டமாக கூறியிருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுவை மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் பாஜக, முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தயாராகி வந்த நிலையில் ரங்கசாமியின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version