வணிகம்
தமிழ்நாட்டில் ரூ.5,300 கோடி முதலீடு செய்யும் நிசான்.. எவ்வளவு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் தெரியுமா?
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கூடுதலாக 5,300 கோடி ரூபாய் முதலீட்டை நிசான் நிறுவனம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசுடன் ரெனால்ட் நிசான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றையும் போட்டுள்ளது.
இந்த புதிய முதலீட்டின் மூலம் நிசான் நிறுவனம் தங்களது சென்னை ஆலையில் உற்பத்தியை அதிகரிக்கும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு வசதியை விரிவுபடுத்தும்.
புதிதாக 6 மாடல் கார்களை அறிமுகப்படுத்தும். அதில் 2 கார்கள் எலக்ட்ரிக் கார்களாக இருக்கும் எனவும் ரெனால்ட் நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
![Renault NIssan Chennai - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/02/Renault-NIssan-Chennai-1024x683.jpg)
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கூடுதலாக 5,300 கோடி ரூபாய் முதலீட்டை நிசான் நிறுவனம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த முதலீட்டின் மூலம் 2000 நபர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலையை 80 சதவிகிதம் வரை முறையாகப் பயன்படுத்தி இங்கு இருந்து உற்பத்தி செய்யப்படும் கார்களை ஏற்றுமதி செய்யவும் ரெனால்ட் நிசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.