Connect with us

இந்தியா

உச்சத்தில் கொரோனா 2வது அலை; மருந்து ஏற்றுமதிக்குத் தடை விதித்த அரசு அதிரடி!!!

Published

on

இந்தியாவில் கொரோனாவின் முதல் அலையைவிட இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 1.50 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வைரஸ் தொற்றுக்கு எதிராக கொடுக்கப்படும் ரெம்டெஸிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசுத் தடை விதித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் வரும் வரை ரெம்டெஸிவிர் மருந்தை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக சுற்றறிக்கை மூலம் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

‘இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஏப்ரல் 11 ஆம் தேதியன்று வரை, நாட்டில் 11.08 லட்சம் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் இருக்கின்றன. எனவே, இதன் காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெஸிவிர் மருந்து அதிக அளவு தேவைப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த மருந்தின் தேவை மேலும் அதிகரிக்கலாம். எனவே, நாட்டில் கொரோனா தொற்று ஒரு கட்டுக்குள் வரும் வரை ரெம்டெஸிவிர் மருந்தை எந்த நிறுவனமும் ஏற்றுமதி செய்யக் கூடாது’ என்று சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது மத்திய அரசு.

நாட்டில் மொத்தம் 7 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், ரெம்டெஸிவிர் மருந்தை உற்பத்தி செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் மொத்தமும் இணைந்து ஒரு மாதத்திற்கு சுமார் 38.80 ரெம்டெஸிவிர் மருந்து யூனிட்டுகளை உற்பத்தி செய்து வருகின்றன. இந்நிலையில் இந்த மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது மட்டுமல்லாமல், தங்களிடம் எந்த அளவுக்கு இருப்பு இருக்கிறது என்பதையும் இணையதளத்தில் பதிவேற்றச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.

 

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!