Connect with us

இந்தியா

நாட்டின் 17,000 ரிலையன்ஸ் ரீடெய்ல் ஸ்டோர்களில் டிஜிட்டல் ரூபாய்.. அதிரடி அறிவிப்பு

Published

on

மத்திய அரசு சமீபத்தில் டிஜிட்டல் ரூபாயை அறிமுகம் செய்த நிலையில் இந்தியாவில் உள்ள 17,000 ரிலையன்ஸ் ரீடெய்ல் ஸ்டோர்களில் டிஜிட்டல் ரூபாய் ஏற்றுக் கொள்ளப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்திய ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் இது குறித்து சோதனை நடவடிக்கை எடுத்த நிலையில் டிஜிட்டல் நாணயங்களை டிசம்பர் ஒன்றாம் தேதி அறிமுகம் செய்தது.

பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி உட்பட 8 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நாட்டில் உள்ள 17,000 ரீடைல் ரிலையன்ஸ் ரீடெய்ல் ஸ்டோர்களில் டிஜிட்டல் ரூபாய் ஏற்றுக் கொள்ளப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் ரூபாயை ஏற்றுக்கொள்ளும்படி ஐசிஐசி வங்கி மற்றும் கோடக் வங்கியுடன் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது என்றும் பில்லிங் செய்த பிறகு நுகர்வோர் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்த விரும்பினால் அவர்களுக்கு டிஜிட்டல் ரூபாயை ஏற்றுக் கொள்ளப்படும் க்யூஆர் கோடு வழங்கப்படும் என்றும் அதன் மூலம் அவர்கள் பணம் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரிலையன்ஸ் ரீடெய்ல் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் அவர்கள் கூறுகையில், ‘யூபிஐ அமைப்பை விட டிஜிட்டல் ரூபாய் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் பரிவர்த்தனைகளும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் இந்தியாவில் உள்ள அனைத்து 17,000 ரிலையன்ஸ் பாதுகாப்பாக ஸ்டோர்களிலும் டிஜிட்டல் ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டமாக டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களுக்கு மட்டும் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக ஒன்பது நகரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது இனி மேலும் வருங்காலத்தில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நகரங்களுக்கும் டிஜிட்டல் ரூபாய் ஏற்று கொள்ளும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!