Connect with us

வணிகம்

ஜியோ வாடிக்கையாளர்களுக்குப் புத்தாண்டு பரிசு அறிவிப்பு!

Published

on

குறைந்த காலத்தில் இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்துள்ள ரிலையன்ஸ் ஜியோ, தங்களது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புத்தாண்டு பரிசுகளை அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டதிலிருந்து பல இலவசங்களை அளித்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது.

இலவசத்தைக் கண்டு ஜியோ வாடிக்கையாளர்களாக மாறியவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, சென்ற ஆண்டு முதல் பிற நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் கட்டணம் விதிக்கப்பட்டது. ஆனால் போட்டி நிறுவனமான ஏர்டெல் இலவசமாகவே பிற நெட்வொர்க்குகள் அழைப்பை அளித்து வந்தது.

இதனால் சென்ற மூன்று மாதங்களாக ஏர்டெல்லில் புதிதாக இணையும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஜியோ பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஒரு நெட்வொர்க்கில் இருந்து பிற நெட்வொர்க்குக்கு அழைக்கும் போது, சம்மந்தப்பட்ட அடுத்த நிறுவனத்திடமும் கட்டணம் பகிர வேண்டி உள்ளது. ஜியோ பல இலவசங்களை வழங்கியதால் பிற நெட்வொர்க்குகளை அழைப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

எனவே அந்த கட்டணத்தை டிராய் குறைக்கும் வரை பிற நெட்வொர்க்குகளை அழைக்கும் போது, ஜியோ வாடிக்கையாளர்கள் நிமிடத்திற்கு 10 பைசா கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தற்போது அந்த கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், புத்தாண்டு முதல் ஜியோ வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க்குகளுக்கு இலவசமாக அழைக்கலாம் என்று அறிவித்துள்ளது.

இவை மட்டுமல்லாமல் புதிய ரீசார்ஜ் போக்குகளையும் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.

ரூ,129-க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாட்களுக்கு இந்தியா முழுவதும் அனைத்து கால்களும் இலவசம். மேலும் 28 நாட்களுக்கு 2 ஜிபி தரவும் வழங்கப்பட்டுள்ளது.

149 ரூபாய்க்கு ரீசாஜ் செய்தால் 24 நாட்களுக்குத் தினம் 1 ஜிபி தரவு மற்றும் இந்தியா முழுவதும் அனைத்து அழைப்புகளும் இலவசம். 199 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்குத் தினம் 1.5 ஜிபி தரவு மற்றும் இந்தியா முழுவதும் அனைத்து அழைப்புகளும் இலவசம்.

ரூ.555-க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்குத் தினமும் 1.5 ஜிபி தரவு மற்றும் இந்தியா முழுவதும் அனைத்து அழைப்புகளும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!