வணிகம்
ஒரே அடியாக 3.78 லட்சம் வாடிக்கையாளர்கள் இழந்த ஏர்டெல்.. காரணம் யார்?
இந்தியன் ரயிவேஸ்க்கு கடந்த 6 ஆண்டுகளாக ஏர்டெல் நிறுவனம் 1.95 இணைப்புகளை வழங்கி வந்த நிலையில் ஜனவர் 1-ம் தேதி முதல் ஜியோ நிறுவனத்திற்கு மாற உள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் ரிலையன்ஸ் ஜியோ 3.78 லட்சம் ஊழியர்களுக்கு வரும் ஆண்டு முதல் சேவை வழங்க உள்ளது.
இந்திய ரயில்வேஸ் ஊழியர்களுக்கான இந்த டெலிகாம் சேவைக்கான ஏலத்தில் முதன் முறையாகப் பங்கேற்ற ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் நிறுவனத்தினை விடு குறைந்த விலைக்குச் சேவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இது ஏர்டெல் நிறுவனத்திற்கு மிகப் பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. இந்த ஒப்பந்தம் கை மாறிய பிறகு இந்தியன் ரயில்வேஸ்க்குத் தற்போது ஆகும் செலவில் 35 சதவீதம் குறையும் என்று கூறப்படுகிறது.