தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளிகள் திறப்பது குறித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் சற்று முன்னர் பள்ளிகள் திறப்பது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதிலுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

* 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும்

* மாணவர்களுக்கு இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்

* பள்ளியில் கை கழுவுவதற்கு சோப்பு கிருமிநாசினி அளிக்கவேண்டும்

* பள்ளிகள் திறக்கும் முன்பே வளாகத்தை சுத்தப்படுத்த வேண்டும்

* கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது
* மாணவர்களுக்கு அறிகுறி இருந்தால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும்

* பள்ளிகள் திறந்த ஒரு வாரத்திற்குள் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும்

* ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் 100% தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும்
மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

seithichurul

Trending

Exit mobile version