தமிழ்நாடு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து நாளை முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது போல், கேரள மாநிலத்திற்கும் பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா நோயிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, சோப்பு போட்டு கைகளை கழுவுவது, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி ஆலோசனை பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி அதனை முற்றிலும் அகற்ற வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்வதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version