இந்தியா

சபரிமலை எதிரொலி.. கேரள முஸ்லீம் கவுன்சிலிலிருந்து ரெஹானா பாத்திமா அதிரடி நீக்கம்!

Published

on

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா கேரளா முஸ்லீம் ஜமாத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம் கொச்சியைச் சோ்ந்த ரெஹானா பாத்திமா கடந்த வெள்ளிக்கிழமை சபரிமலைக்கு செல்ல முயன்றார். ஆனால் இவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

ரெஹானா பாத்திமா முஸ்லீம் என்பதால் இந்த பிரச்சனை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் இவர் மதம் மாறி இந்துவாகிவிட்டார் என்றும் இன்னொரு பக்கம் விவாதம் செய்யப்பட்டது.

இவர் முஸ்லீம் சமூகத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். கேரளா முஸ்லீம் ஜமாஅத் கவுன்சில் இவரை அதிரடியாக நீக்கி உள்ளது. இவர் இந்து மதத்திற்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்தார் என்று கூறி இவரை நீக்கி இருக்கிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version