தமிழ்நாடு
வங்கிகள் இயங்கும் நேரம் திடீர் மாற்றம்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நாளை முதல் வங்கிகள் இயங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி திரையரங்குகள், மால்கள், பெரிய ஷாப்பிங் கடைகள் ஆகியவைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்பதும் திறந்திருக்கும் கடைகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.