தமிழ்நாடு

வங்கிகள் இயங்கும் நேரம் திடீர் மாற்றம்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

Published

on

நாளை முதல் வங்கிகள் இயங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி திரையரங்குகள், மால்கள், பெரிய ஷாப்பிங் கடைகள் ஆகியவைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்பதும் திறந்திருக்கும் கடைகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை முதல் வங்கிகள் சேவை இயங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக மாநில வங்கிகள் குழுமம் அறிவித்துள்ளது. நாளை முதல் அதாவது ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பின்னர் கொரோனா வைரஸ் நிலைமையை பொருத்து வங்கி இயங்கும் நேரம் மீண்டும் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version