தமிழ்நாடு

இன்றும் நாளையும் ரெட்-அலர்ட்: தமிழகத்தில் மேலும் வலுக்கும் மழை!

Published

on

வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று, தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளதன் காரணமாகவும் இன்றும் நாளையும் தமிழகத்துக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் காலையிலிருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சென்னைக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது என்பதும் ஏற்கனவே சென்னையில் உள்ள பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் மேலும் தண்ணீர் தேங்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி நினைத்ததை விட அதி வேகமாக நகர்ந்து வருவதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் தீவிர கனமழை பெய்து வருவதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது என்பதும் மழைநீர் லேசாக வடிந்த நிலையில் மேலும் மேலும் மழை பெய்து கொண்டே இருப்பதால் தண்ணீர் தொடர்ந்து தேங்கி கொண்டிருப்பதாகவும் சென்னையில் கடந்த சில மணி நேரங்களாக விடாமல் மழை பெய்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Trending

Exit mobile version