தமிழ்நாடு

இன்று எத்தனை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை? வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published

on

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கையும் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது விடுத்து வருகிறது என்பதும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் அதனால் இந்த மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சென்னை உள்பட பல மாவட்டங்களில் விடிய விடிய நேற்று மழை பெய்து கொட்டிய நிலையில் மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version