தமிழ்நாடு

அதிமுக வெற்றி பெற்ற தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை: முடிவு மாறியதா?

Published

on

அதிமுக வெற்றி பெற்ற தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று வரும் நிலையில் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட நாற்பத்து ஏழாவது வார்டில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த வெற்றி அறிவிப்பு குறித்து சர்ச்சையான நிலையில் மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டது. இதனை அடுத்து அந்த தொகுதியில் தேர்தல் அதிகாரிகளின் முடிவுகளின்படி மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

ஆனால் வாக்கு எண்ணிக்கையிலும் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் திமுக உள்பட மற்ற கட்சி தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

Trending

Exit mobile version