வணிகம்

மோடியின் ரூ.15 லட்சம் வாக்குறுதிக்கு என்ன காரணம் தெரியுமா?

Published

on

டெல்லி: பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலின் போது ரூபாய் 15 லட்சம் கொடுப்பதாக கூறியதற்கு காரணம் என்ன என்று பாஜக அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் கொடுத்துள்ளார்.

நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது அவர் இந்த விளக்கத்தை அள்ளித்தார்.

அதில் அவர், நாங்கள் ஆட்சிக்கு வர மாட்டோம் என்று நினைத்தோம். அப்படி நினைத்துதான் நாங்கள் நிறைய வாக்குறுதிகளை கொடுத்தோம். ஆனால் கடைசியில் ஆட்சிக்கு வந்துவிட்டோம்.

இப்போது மக்கள் எங்களிடம் அந்த வாக்குறுதி குறித்து கேட்கிறார்கள். நாங்கள் எதுவும் சொல்லாமல் சிரித்துவிட்டு கடந்து விடுகிறோம். வேறு வழியில்லை என்றுள்ளார்.

இவரின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சிக்கு நல்ல தீனியாக அமைத்துள்ளது. அதோடு, பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version