இந்தியா

சென்னையில் இனி நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்க முடியாதா? அதிர்ச்சி தகவல்!

Published

on

சென்னையில் இனி ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது..

ஏற்கனவே ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் மந்தமாக இருக்கும் நிலையில் தற்போது கட்டுமானப் பொருட்கள் மற்றும் எரிபொருள் பொருட்கள் உயர்வு காரணமாக 10 முதல் 15 சதவீதம் வீடுகளின் விலையை உயர்த்த வேண்டிய நிலையில் இருப்பதாக இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது .

கடந்த 45 நாட்களில் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து விட்டதாகவும் குறிப்பாக இரும்பு விலை கிலோ 50 ரூபாய் உயர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எரிபொருள், போக்குவரத்து ஆகிய செலவுகள் அதிகரித்து விட்டது என்றும் கட்டுமான தொழிலாளர்களின் கூலியும் உயர்ந்து விட்டது என்றும் அதனால் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் வீடுகளின் விலையை 10 முதல் 15 சதவீதம் உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகும் இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணத்தையும் அதிகரித்துள்ளதாகவும் மூலப் பொருள்களின் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version