செய்திகள்
பிரதமரை ‘டேக்’ செய்து ட்வீட் போடத் தயார்!- மநீம தலைவர் கமல் விளக்கம்
பிரதமர் மோடியை டேக் செய்யாமல் கமல் செய்த புதிய நாடாளுமன்றம் விமர்சனத்துக்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் புதிய நாடாளுமன்றத்துக்கு அவசியமா என்பது போன்றதொரு கேள்வியை கேட்டிருந்தார். இதுகுறித்து கமல் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? ” எனக் குறிப்பிட்டிருந்தார்.
சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?
(1/2)— Kamal Haasan (@ikamalhaasan) December 13, 2020
மத்திய அரசுக்கு எதிரான ஒரு கேள்வியில் பிரதமர் மோடியைக் கூட டேக் செய்யவில்லையே கமல் எனப் பலரும் கமலுக்கு எதிராகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர். இதற்கு விளக்கமளித்த கமல், “பிரதமர் மோடியை ட்விட்டரில் டேக் செய்து மீண்டும் ஒரு பதிவை இடத் தயார்” என்றுள்ளார்.