தமிழ்நாடு

சிறை செல்லத் தயார்: எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

Published

on

தான் சிறை செல்லத் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிமுக அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நடிகை வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் சில நாட்களுக்கு முன்னர் ரெய்டு நடந்தது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல் வந்து கொண்டிருக்கிறது.

இதைப் போல கைதுப் பட்டியலில் பல அமைச்சர்கள் பெயர்கள் உள்ளதாக சொல்லப்படுகின்றன. இதிலிருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று முறையிடவே சமீபத்தில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டாக டெல்லிக்குச் சென்று மோடி, அமித்ஷாவை நேரில் பார்த்து முறையிட்டு உள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் உள்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘எங்கள் புரட்சித் தலைவி ஜெயலலிதாவே சிறையில் இருந்தவர் தான். அப்படி இருக்கையில் சிறைவாசத்துக்காக நாங்கள் அஞ்ச மாட்டோம். நான் சிறை செல்லத் தயாராக இருக்கிறேன். எங்கள் தொண்டர்கள் மீது மட்டும் கை வைக்காதீர்கள்’ என்று கட்சிக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version