தமிழ்நாடு

தமிழகத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை: புயல் உருவாகும் என எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், 7 மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு இருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியிருப்பதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தில் மேலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி தமிழகத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நாளை மறுநாள் அதாவது நவம்பர் 10ஆம் தேதி சிவப்புநிற எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வரும் 11ம் தேதி தமிழக கடற்கரையை நெருங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version