கிரிக்கெட்

IPL – பஞ்சாபை கலாய்ப்பதாக நினைத்து மொக்கை வாங்கிய RCB!

Published

on

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா, இரண்டு நாட்களுக்கு முன்னர் கோலகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், விராட் கோலி தலைமை தாங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் மோதின. கடைசிப் பந்து வரை சென்ற இந்தப் போட்டியில் பெங்களூர் வெற்றி கண்டது.

இந்த வெற்றிக்கு ஆர்.சி.பி சார்பில் விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் பெரும் பங்கு வகித்தார். அவர், டாப் ஆர்டரில் விளையாடி 28 பந்துகளுக்கு 39 ரன்கள் குவித்தார். அவர் கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் களமிறங்கி விளையாடினார். பஞ்சாப் அணியில் அவர் தொடர்ந்து சொதப்பவே, அவரை விடுவித்தது அந்த அணி. அதே நேரத்தில் ஆர்.சி.பி, மேக்ஸ்வெல்லெப் பெரும் தொகை கொடுத்து ஏலம் எடுத்தது.

தன் பெரும் தொகைக்கு நியாயம் சேர்ப்பது போல முதல் போட்டியிலேயே ஜொலித்துள்ளார் மேக்ஸ்வெல். இதைத் தொடர்ந்து ஆர்.சி.பி அணி, தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து, பஞ்சாப் கிங்ஸை டேக் செய்து, ‘கொரோனா காரணமான சமூக இடைவெளி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், மேக்ஸ்வெல்லை எங்களுக்கு விட்டுக் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்திருப்போம் பஞ்சாப்’ என்று கேலி செய்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பஞ்சாப் கிங்ஸ், ‘அது இருக்கட்டும், கெயில், கே.எல்.ராகுல், மாண்டி, சர்ஃபராஸ், மயாங்க் அகர்வால் உள்ளிட்டோரை நீங்கள் விட்டுக் கொடுத்ததற்கு நன்றி’ என்று மொக்கை கொடுத்து விட்டது. இந்த அனைத்து வீரர்களும் கடந்த சீசன்களில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version