சினிமா செய்திகள்

R.C 15: புது ஜோடி சித்தார்த் மற்றும் கியாராக்கு வாழ்த்து கூறிய ஆர்.சி.15 படக்குழு..!

Published

on

பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி காதலிப்பதாகக் பலமுறை கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவரும் தாங்கள் காதலிப்பதாகக் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் பிப்ரவரி 7 அன்று சித்தார்த் மல்கோத்ரா – கியாரா அத்வானியின் திருமணம் நடைப்பெற்றது. இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள சூர்யகர் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. சித்தார்த் மற்றும் கியாரா, திருமண வரவேற்பு புது டெல்லியில் பிப்ரவரி 9 ஆம் தேதியும், மும்பையில் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் திருமணம் முடிந்தவுடன், திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படங்களின் கீழ் திரைப் பிரபலங்கள், ரசிகர்களும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.அந்த வகையில் இயக்குனர் ஷங்கரின் ஆர்.சி. 15 படக்குழு மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்தது கியாரா – சித்தார்த் ஜோடிக்கு பூத்தூவி தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கும் அடுத்த பிரமாண்டமான திரைப்படம் ஆர்.சி.15. ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, கியாரா ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படம் மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது.

கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஷேர்ஷா படத்தில் கியாரா அத்வானியும், சித்தார்த் மல்ஹோத்ராவும் இணைந்து நடித்தனர். அதன் பிறகு அவர்கள் காதலிப்பதாக வதந்தி பரவியது. அவர்கள் காதல் குறித்து பல முறை கேள்வி கேட்கப்பட்டுள்ள்து. இருவரும் அதற்கு வெட்கப்பட்டு,அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவிர்த்துவிடுவார்கள்.

seithichurul

Trending

Exit mobile version