உலகம்

பார்வையற்றவர்களும் இனி ரூபாயை எளிதாக கண்டுபிடிக்கலாம்.. ஆர்.பி.ஐ வெளியிடும் ஆப்!

Published

on

டெல்லி: விழி மாற்று திறனாளிகள் ரூபாய் நோட்டுகளை எளிதாக அடையாளம் காணும் வகையில் ஒரு ஆப் ஒன்றை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்றை இதற்காக வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. இதை உருவாக்கும் பணியில் ரிசர்வ் வங்கி ஈடுப்பட்டு வருகிறது.

இந்த ஆப் மொபைலில் இருக்கும் சென்சார்கள் மூலம் இயங்க கூடியது.இதற்காக தனியார் அமைப்பு ஒன்றின் ஆதரவை நாடி இருக்கிறது.

மொபைலின் கேமராவில் ரூபாயை காட்டினால் அதுவே அதை ஸ்கேன் செய்து என்ன ரூபாய் என்று கண்டுபிடிக்கும். அடையாளங்களை வைத்து கண்டுபிடிக்கும். பின் ஸ்பீக்கர் மூலமாக அதை தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version