செய்திகள்
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மாட்டோம்!…வங்கி அதிகாரிகள் அடாவடி (வீடியோ)
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இன்று காலை குடியரசு தினவிழா நடந்தது. இதில், ரிசவர் வங்கி ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்த பின் நிறைவாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்ட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி ஊழியர்கள் யாரும் எழுந்து நின்று மரியாதை செய்யவில்லை. ஏன் இப்படி செய்கிறீர்கள்? என செய்தியாளர்களிடம் அவர்கள் கேட்டதற்கு தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. எழுந்து நிற்க தேவையில்லை என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது என அவர்கள் செய்திகாளர்கள்டைம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த பலரும் ஒன்றிய அரசு வங்கி ஊழியர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழுக்கு மரியாதை கொடுக்காமல் அவர்கள் நடந்து கொள்வதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கக்பட்ட போது எழுந்து நிற்காமல் அலட்சியம் செய்த அலுவலர்கள்
நிற்க வேண்டியது கட்டாயமில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தமிழ் தெரிந்த அலுவலர்களே வாதம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியதுpic.twitter.com/g5694RqfuI
— DON Updates (@DonUpdates_in) January 26, 2022