வணிகம்
லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஓர் நற்செய்தி; ஆர்பிஐ எடுத்த அதிரடி முடிவு!
நிதி சிக்கலில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியை மீட்க ஆர்பிஐ அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. ஆர்பிஐ எடுத்துள்ள இந்த முடிவு லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது.
வரா கடன் அதிகரிப்பால், கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த லட்சுமி விலாஸ் வங்கிக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. அதில் உடனடியாக தலையிட்ட ஆர்பிஐ டிசம்பர் மாதம் வரை, லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.25,000 ரூபாய் வரை மட்டுமே பணம் பரிவர்த்தனை செய்ய முடியும் என்று அறிவித்தது.
லட்சுமி விலாஸ் வங்கி கிளைகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், எங்கு வங்கி திவால் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுக்க தொடங்கினர். வாடிக்கையாளர்கள் பயப்பட வேண்டாம் என்று ஆர்பிஐ அறிவுறுத்தி இருந்தது.
இருந்தாலும் லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பயத்திலேயே உள்ளனர். அண்மையில் யெஸ் வங்கி கூட இதே போன்று நிதி பற்றாக்குறையில் சிக்கிய போது உடனே அதில் தலையிட்ட ஆர்பிஐ, வங்கியை மீட்டு இப்போது சரி செய்துள்ளது. அதே போன்ற ஒரு பிரச்சனைதான் லட்சுமி விலாஸ் வங்கிக்கும் ஏற்பட்டுள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கியின் நிதி பற்றாக்குறைக்கு வேகமாகத் தீர்வு காண வேண்டும் என்று நினைத்த ஆர்பிஐ, டிசிஎஸ் வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கியை ஒருங்கிணைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் டிபிஐஎல் மூலமாக, லட்சுமி விலாஸ் வங்கிக்கு 2500 கோடி ரூபாய் கூடுதல் மூலதனம் பெறவும் ஏற்பாடு செய்துள்ளது. ஆர்பிஐ எடுத்துள்ள இந்த முயற்சியால் விரைவில் லட்சுமி விலாஸ் வங்கியின் நிதிப் பற்றாக்குறைக்குத் தீர்வு ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.