வணிகம்
ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி மீது ரூ.1 கோடி அபராதம் விதிப்பு!
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதற்காக, ஜியோ பேமெண்ட்ஸ் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பேமண்ட்ஸ் வங்கி நடைமுறை விதிகளின் படி, வங்கியின் நிர்வாக இயக்குநர் அல்லது தலைமை நிர்வாக அதிகாரி வெளியேறும் பட்சத்தில், புதிய தலைவருக்கான கோரிக்கையை 4 மாதங்களுக்கு முன்பே வங்கிகள் வழங்க வேண்டும்.
ஆனால் இந்த விதிமுறைகளை ரிலையன்ஸ் ஜியோவின், ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி பின்பற்றவில்லை என்ற காரணத்துக்காக, ஏன் வங்கி மீது அபராதம் விதிக்கக் கூடாது என்று ஆர்பிஐ கடிதம் எழுதியிருந்தது.
அதற்கு ஜியோ பேமென்ட்ஸ் வங்கியிடம் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டதை அடுத்து, அர்பிஐ ஒரு கோடி ரூபாய் அபராதத்தை விதித்து அறிவித்துள்ளது.