இந்தியா
புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க பேடிஎம் நிறுவனத்திற்கு தடை: ஆர்பிஐ எச்சரிக்கை
பேடிஎம் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பேமெண்ட் வங்கிகளில் ஒன்று பேடிஎம் என்பதும் இதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் பேமெண்ட் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கக்கூடாது என இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது
பண பரிவர்த்தனை தொடர்பான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பேடிஎம் நிறுவனம் முறையாக கடை பிடிக்க வில்லை என்றும் இதனால் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது
மேலும் வருமான வரி தணிக்கையாளர் அளித்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையிலும் பேடிஎம் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம்
ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பேடிஎம் வங்கி மீது இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அளித்துள்ளது