தமிழ்நாடு
‘ஓட்டு போடலைனா எப்படி பழி வாங்குறேன் பாரு!’- அதிமுக அமைச்சரின் பகீர் பேச்சு; வைரல் வீடியோ
தமிழக வருவாய்த் துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான ஆர்.பி.உதயகுமார், ‘தன்னைப் பகைத்துக் கொண்டால், வாக்கு சேகரிப்பின் போது எதுவும் பேசாமல், வெற்றி பெற்று வந்த பின்னர் பழி வாங்குவேன்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இது குறித்தான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமைச்சர் உதயகுமார், மதுரையின் திருமங்கலத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கான மேம்பாட்டுப் பயிற்சி கலந்து கொண்டார்.
என்னை எதிர்த்தால் முதியோர் உதவித்தொகை பட்டா வழங்காமல் பழி வாங்குவேன்….
“மாண்புமிகு” அமைச்சர் RB உதயகுமார் pic.twitter.com/hGPSKeC3ql— Sriram (@SriramMadras) February 24, 2021
அப்போது அவர் உரையாற்றிய போது, ‘தேர்தல் நேரத்தில் யார் என்ன பேசினாலும் எதுவும் செய்ய மாட்டேன். வெட்கம், மானம் இல்லாமல் அதைக் கேட்டுக் கொள்வேன். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்று அமர்ந்த பின்னர் என்னிடம் தான் அவர்கள் வர வேண்டும்.
அந்த நேரத்தில் முதியோர் உதவித் தொகை, பட்டா வழங்காமல் பழி வாங்குவேன்’ என்று பேசினார். அமைச்சரின் பேச்சைக் கேட்டு அங்கு கூடி இருந்தவர்கள் அதிர்ச்சி கலந்த தொனியில் வாய் விட்டுச் சிரி