Connect with us

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக முன்னாள் உளவுத்துறை உயரதிகாரி ‘ஆர்.என்.ரவி’ நியமனம்!

Published

on

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக முன்னாள் உளவுத்துறை உயரதிகாரியான ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவருக்கு பஞசாப் மாநில ஆளுநர் பொறுப்பு அண்மையில் கூடுதலாக வழங்கப்பட்டது. எனவே விரைவில் தமிழ்நாடு ஆளுநர் பதவியிலிருந்து விலகி பஞ்சாப் மாநில  ஆளுநராக பன்வாரி லால் புரோஹித் முழுமையாகச் செயல்படுவார். தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்ற கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநராக முன்னாள் உளவுத்துறை அதிகாரியும் நாகாலாந்து ஆளுநருமான ஆர்.என்ரபி நியமிக்கப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.என் ரவி 1974-ல் இயற்பியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு சில காலம் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி 1976-ம் ஆண்டு இந்திய ஆவல் பணியில் சேர்ந்தார். முதலில் இவருக்குக் கேரளாவில் பணி ஒதுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாகக் கேரளாவில் இவர் பல்வேறு காவல் பதவிகளில் பணியாற்றினார். பின்னர் மத்திய அரசி பணிக்கு மாற்றலாகி, புலனாய்வுத்துறையில் பணியாற்றினார்.  இந்தியாவில் உளவுத்துறை இண்டலிஜென்ஸ் பியூரோவில் இவர் பணியாற்றியுள்ளார். பல்வேறு முக்கிய பணிகளிலிருந்த ஆர்.என்.ரவி 2012-ம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று தன்னுடைய அனுபவங்களைக் கட்டுரைகளாக வெளியிட்டு வந்தார்.
2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆகஸ்ட் 29-ம் தேதி நாகாலாந்து நாஃபா சமாதான பேச்சுவார்த்தை மையத்தின் மத்தியஸ்தராக ரவி நியமிக்கப்பட்டார். 2018-ம் ஆண்டு துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நியமனமானார். 2019-ம் ஆண்டு மே மாதம் நாகாலாந்து ஆளுநர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. இப்போது தமிழ்நாடு ஆளுநர் பதவி ஆர்.என்.ரவிக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!