Connect with us

தமிழ்நாடு

மக்களவையில் பாதியிலேயே முடிக்கப்பட்ட ரவீந்திரநாத் குமாரின் பேச்சு!

Published

on

மக்களவையில் நேற்று தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் பதிலளித்தார். இவரது பேச்சு பாதியிலேயே முடிக்கப்பட்டது.

மக்களவையில் நேற்று திமுக எம்பி தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பேசினர். அப்போது அவர்கள் அதிமுக அரசை மிக கடுமையாக விமர்சித்தனர். தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு ஊழல் மிகுந்த அரசாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். மேலும் மக்களுக்கு தண்ணீரை விநியோகிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து திமுக எம்பிக்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த அதிமுக எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார், பருவமழை பொய்த்ததும், நீர் ஆதாரங்கள் வற்றியதும்தான் தண்ணீர் பாற்றாக்குறைக்கான முக்கிய காரணம். திமுக தமிழக அரசின் மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறது. தற்போதைய தண்ணீர் பிரச்சினையை சமாளிக்கவும், எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கான தரவுகள் என்னிடத்தில் உள்ளன. அவர்கள் விரும்பினால் வழங்குவதற்கு தயாராக உள்ளேன். படித்துபார்த்துவிட்டு அவர்களுக்கு சொந்தமான ஊடகங்களில் ஒளிபரப்பட்டும். அவர்களுக்கு ஊடகங்களின் ஆதரவும் உள்ளது. நான் வழங்கும் ஆதாரங்களில் எந்தத் தகவலையும் மறைக்காமல் ஒளிபரப்ப வேண்டும் என்றார். தொடர்ந்து ரவீந்திரநாத் பேச முயன்றபோது அவையில் கூச்சல் குழப்பங்கள் ஏற்படவே அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார், இதையடுத்து ரவீந்திரநாத் குமாரின் பேச்சு பாதியிலேயே முடிக்கப்பட்டது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!