தமிழ்நாடு
ஞாயிற்றுகிழமையும் ரேசன் கடை உண்டு: தமிழக அரசு அறிவிப்பு!
![ration store - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/05/ration-store.jpg)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சராக சமீபத்தில் பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிதி உதவியாக அரிசி அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூபாய் 2000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த தொகைக்கான டோக்கன்கள் விரைவில் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்தன
இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் ரேஷன் கடைகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை நிவாரண நிதிக்காக டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை டோக்கன் வழங்கப்படும் என்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அதற்கான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
கொரோனா நிவாரண நிதிக்காக டோக்கன் வாங்க வரும் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதி தொகை டோக்கன் வழங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பணி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.