செய்திகள்
வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடை செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு
![ration shop - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/07/ration-shop.jpg)
தமிழகத்தில் முன்பெல்லாம் ரேஷன் கடைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மட்டுமே செயல்பட்டு வந்தது. அதன்பின் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அதன்பின் பொங்கல் பரிசு பொருட்கள் கொடுக்கும் பணி வந்ததால் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.மேலும், சில நாட்கள் வழக்கமான பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை.தற்போது பொங்கல் பரிசு கொடுக்கும் பணி முடிந்துவிட்டதால் வழக்கான பொருட்களை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வருகிற 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடை செயல்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. ஜனவரி 30ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு விட்டதால் பிப்ரவரி 26ம் தேதி சனிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.