இந்தியா
பாலியல் தொழிலாளிகளுக்கு ரேசன், ஆதார், வாக்காளர் அட்டைகள்: உச்சநீதிமன்றம் உத்தரவு
பாலியல் தொழிலாளிகளுக்குm ரேஷன் கார்டுகL, ஆதார் அட்டைகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்க வேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டைகள் இல்லை என்றும் அவர்களும் இந்த நாட்டின் குடிமகன்கள் என்பதால் அவர்களுக்கு உடனடியாக தேவையான அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாலியல் தொழில் செய்பவர்களாக இருந்தாலும் வேறு எந்த தொழில் செய்பவர்களாக இருந்தாலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகள் பெறுவதற்கு உரிமை உண்டு என்றும் அதனால் பாலியல் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவது மத்திய மாநில அரசுகளின் கடமை என்றும் தெரிவித்துள்ளனர்
மேலும் பாலியல் தொழிலாளர்களின் பட்டியலை தயாரிக்க தேசிய மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புகளின் உதவியை மாநில அரசின் அதிகாரிகள் நாடலாம் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், உடனடியாக பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டைகள் ரேஷன் அட்டைகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்
பாலியல் தொழிலாளிகளின் பெயர்கள், அடையாளம் தொடர்பாக ரகசியம் காக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர். இதனை அடுத்து இன்னும் ஒரு சில மாதங்களில் பாலியல் தொழிலாளர்களுக்கும் ரேஷன், ஆதார் மற்றும் வாக்காளர் அட்டைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது