Connect with us

உலகம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வரலாறு படைத்த இந்திய மாணவி.. மாணவர் அமைப்புக்கான தேர்தலில் வெற்றி

Published

on

Rashmi Samant become first Indian female president of OUSU

லண்டன் : உலகின் மிக பிரபல பல்கலைக்கழகமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவை சேர்ந்த மாணவி.

கடந்த வாரம் நடைபெற்ற மாணவர் ஒன்றியத்தின் தேர்தலில் இந்தியாவை சேர்ந்த மாணவி ரஷ்மி சமந்த் போட்டியிட்டுள்ளார். பல்கலைக்கழகத்தின் லினாக்ரே கல்லூரியில், நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு, எரிசக்தி அமைப்புகளில் எம்.எஸ்.சி., படிக்கும் பட்டதாரி மாணவியான இவர் அந்த தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் பதவிக்கு வந்த முதல் இந்திய மாணவி ரஷ்மி சமந்த் தான். மொத்தம் பதிவான 3,708 வாக்குகளில் 1,966 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 2021-2022 ஆண்டுக்கான இந்த தேர்தலில் அவருடன் மேலும் சில இந்தியர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை தலைவராக தேவிகாவும், மாணவர் அறங்காவலர்களாக டிடி கோயலும் வெற்றி பெற்றனர்.

Also Read: ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண்..யார் இந்த அரோரா அகன்ஷா?

மணிப்பால் ஐஐடியில் படித்த இந்தியாவை சேர்ந்த ரஷ்மி சமந்த் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காலனித்துவ நிலையை நீக்குதல் போன்ற முக்கிய வாக்குறுதிகளை வழங்கியது மாணவர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தியது. நாம் ஒன்றாக இணைந்து, பல்கலைக்கழகத்தில் நீண்டகால குறைபாடுகளை சீர்திருத்தலாம். மாணவர்களுக்கு தேவையான ஆதரவுகளை, வளங்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளும் வழங்கினார்.

முன்னாள் பிரிட்டிஷ் காலனியைச் சேர்ந்த ஒரு கருப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன பெண்ணாக இருப்பதால், ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களுக்கு ரஷ்மி பரிவு காட்டுவார் என்றும் அவருடைய திட்டங்களில் கூறப்பட்டுள்ளது.

ஏகாதிபத்தியம் என நிரூபிக்கப்பட்ட அனைத்து சிலைகளையும் அகற்றுவதற்காக பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளின் மாநாட்டை லாபி செய்வதாகவும், ஆக்ஸ்போர்டு பாடநூல்களில் மாணவர்களுக்கு மாறுபட்ட அறிவார்ந்த குரல்களின் சாதனைகள் குறித்து கொண்டாடுவதற்கும் கல்வி கற்பிப்பதற்கும் உறுதி செய்வதற்காக பாடத்திட்டங்களில் காலனியத்துவம் நீக்குதல் குறித்து விரிவான ஆலோசனையை நடத்துவதாக சமந்த் உறுதியளித்துள்ளார்.

இதுவரை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் பதவிக்கு எந்த இந்தியாவை சேர்ந்த மாணவியும் வந்தது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக பல்வேறு உறுதிமொழிகள் மற்றும் வாக்குறுதிகளுடன் ரஷ்மி சமந்த் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார்.

author avatar
seithichurul
சினிமா4 மணி நேரங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்4 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்1 நாள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா1 நாள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா3 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!