தமிழ்நாடு

காசிமேடு மீனவர் வலையில் சிக்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள மீன்கள்!

Published

on

சென்னை காசிமேடு மீனவர் வலையில் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள அரியவகை மீன் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மீனவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து மீன் பிடிக்கச் செல்லும்போது பல நேரங்களில் சுமாராகவே மீன்கள் வலையில் சிக்கினாலும், மிக அரிதாக சில நேரங்களில் அரிய வகை மீன்கள் சிக்கும் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இன்று மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில் அவரது வலையில் சுமார் 2 டன் எடையுள்ள அரிய வகை கூரை கத்தாளை மீன்கள் சிக்கின. இந்த மீன்களின் மதிப்பு சுமார் ஒரு கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த மீன்களை அவர் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அவருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளதை அடுத்து அந்த பகுதி மக்கள் அவருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version