இந்தியா

ஆணுறுப்பை பிளேடால் அறுத்துக்கொண்ட பாலியல் குற்றவாளி!

Published

on

கேரளாவில் உள்ள பீர்மேடு சிறைச்சாலையில் உள்ள பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஒருவர் தனது ஆணுறுப்பை பிளேடால் அறுத்துக்கொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் வண்டிபெரியார் பகுதியை சேர்ந்த 42 வயதான நபர் ஒருவர் தனது சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்து நான்கு மாதத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் தான் குற்றமற்றவன் என தொடர்ந்து கூறி வந்தார்.

இந்நிலையில் பீமேடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட போதும் அவரை ஜாமீனில் எடுக்க யாரும் வரவில்லை. இதனால் மனமுடைந்த அந்த நபர் ஷேவ் செய்ய கொடுத்த பிளேடால் தனது ஆணுறுப்பை அறுத்துக் கொண்டார். இதனையடுத்து அவரை சிறை அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அவரது ஆணுறுப்பு மீண்டும் பொறுத்தப்பட்டு, அவரது உடல்நிலை சீராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending

Exit mobile version