செய்திகள்

தலைமை நீதிபதியானார் ரஞ்சன் கோகாய்.. பதவியேற்றார்!

Published

on

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி ஏற்று இருக்கிறார்.

முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் நேற்றோடு முடிவடைந்தது. இதனால் இன்று புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி ஏற்று இருக்கிறார்.

உச்ச  நீதிமன்ற முறைப்படியே இவரது பெயரை நீதிபதி தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்தார். மூத்த நீதிபதி என்ற அடிப்படையில் இவர்  பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அசாம் மாநில முன்னாள் முதல்வர் கேஷப் சந்திர கோகாயின் மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1978லேயே பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டார்.

முதல்முறையாக 2001ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version