சினிமா செய்திகள்
ரன்பீர் கபூரை கேள்வி கேட்ட பிபிசி செய்தியாளரை வருமான வரி ஆய்வு குறித்துக் கேட்டு கேலி செய்து சர்ச்சை!
ரன்பிர் கபூர் புதன்கிழமை, ‘து ஜோதி மைனே மாக்கார்’ என்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்துவிட்டு அவர் பணிபுரியும் நிறுவனம் குறித்து கேள்வி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகரில் நடைபெற்ற இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், பாலிவுட் படங்கள் ஏன் அண்மைக் காலமாக நல்ல வசூலைப் பெறுவதில்லை என பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், பதான படம் நல்ல வசூல் செய்துள்ளதே என்று பதில் அளித்தார்.
அவர் அத்துடன் அதை நிறுத்திக்கொள்ளாமல், நீங்கள் எந்த பத்திரிக்கையிலிருந்து வந்துள்ளீர்கள் என கேட்டார். அதற்கு அந்த பெண் பத்திரிக்கையாளர் பிபிசி என பதில் அளித்துள்ளார்.
உடனே உங்கள் அலுவலகத்தில் கூட வருமான வரித் துறையினர் ஆய்வு செய்துள்ளீர்கள் என நான் அறிந்தேன். அது என்ன ஆனது? முதலில் நீங்கள் அதனைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். நான் பாலிவுட் பற்றிச் சொல்கிறேன் எனக் கூறினார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் தன்னை நோக்கி வந்த கேள்விக்கு மட்டும் பதில் அளிக்காமல், அந்த பத்திரிக்கையாளர் பணிபுரியும் நிறுவனம் பற்றி கேட்டு கிண்டல் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
Journalist: BW ka bura time chal raha hai aajkal
Ranbir: Kya baat kar rahe ho? #Pathaan ki collections dekhi hai aapne? Aap kaunsi publication se ho?
Journalist: BBC news
Ranbir: Phir aapke bhi toh bura time chal raha hai na? ????CHAD #RanbirKapoor???? ????
pic.twitter.com/eORtpFDLTN— Raymond. (@realm_of_kapoor) February 22, 2023