டிவி
பிக் பாஸ்ல இருந்து வெளிய வந்ததும் ரம்யா போட்ட கும்மாங்குத்து! #ViralVideo
பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒரு வழியாக நேற்று முன் தினம் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் பெரும்பான்மையானவர்கள் எதிர்பார்த்தது போல நடிகர் ஆரி, டைட்டில் வென்றார்.
பிக் பாஸ் வீட்டில் கடைசி வரை எவிக்ட் ஆகாமல் இருந்தவர்கள் ஆரி, பாலா, ரியோ, ரம்யா பாண்டியன் மற்றும் சோம். இதில் சோம், 5வது இடத்தில் வந்தார். இவரை அடுத்து ரம்யா, மூன்றாவது ரன்னர்-அப்பாக வீட்டிலிருந்து வெளியே வந்தார். அவருக்குப் பின் ரியோ ராஜ், இரண்டாவது ரன்னர்-அப் ஆகவும், பாலா ரன்னர்-அப் ஆகவும் வந்தனர். கடைசி வரை நின்று டைட்டில் அடித்தது ஆரி.
கடந்த 17 ஆம் தேதி, சுமார் 6 மணி நேரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்ற அனைவரும் வந்திருந்தனர். அதில் பலர் தங்கள் தனித் திறமையை வெளிப்படுத்தினார்கள். அந்த கலை நிகழ்ச்சிகளுடன் பிக் பாஸ் டைட்டில் வின்னரும் அறிவிக்கப்பட்டார்.
ஒவ்வொரு போட்டியாளரும், வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் முதலில் செய்யும் விஷயம் மிகவும் கவனத்துக்கு உள்ளாகும். அந்த வகையில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு, அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் கோலாகல வரவேற்பைக் கொடுத்துள்ளனர். செண்ட மேளம் வைத்து, மாலைப் போட்டு, கேக் வெட்டி ரம்யாவுக்கு தடபுடளான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவரும் நல்ல குத்தாட்டம் போட்டு அனைத்தையும் அனுபவித்து, மூன்று மாதங்களுக்குப் பின்னர் வீட்டுக்குள் சென்றார். இது குறித்தான வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.