சினிமா செய்திகள்

விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நட்ட ரம்யா பாண்டியன்: அது என்ன கணக்கு 59?

Published

on

விவேக் நினைவாக பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் திருவள்ளூரில் 59 மரக்கன்றுகளை நட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் விவேக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு காரணமாக தனது 59வது வயதில் காலமானார். இதனையடுத்து அவரது வயதை கணக்கில் கொண்டு 59 மரங்களை நடும் விழாவில் கலந்துகொள்ள ரம்யா பாண்டியன் ஒப்புக்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இந்த மரங்கள் நட முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் மற்றும் காவலர்கள் உதவியுடன் ஆயுதப்படை மைதானத்தில் 59 மரங்களை ரம்யா பாண்டியன் நட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விவேக் மறைந்த தினத்தில் ரம்யா பாண்டியன் உருக்கமாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பதிவு செய்தார் என்பதும் அந்த பதிவு மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் விவேக் தனது வாழ்நாளில் ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் மறைந்த பின்பு அவரது கனவை நனவாக்கும் வகையில் பல திரையுலக பிரபலங்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version