சினிமா

கடைசியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவது இவர்தான்.!.. ஒருவழியா கன்பார்ம் ஆயிடுச்சு…

Published

on

கடந்த நான்கு ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் ஐந்தாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசன் 50 நாட்களை கடந்து தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

திடீரென கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து கமல்ஹாசன் மீண்டு வரும் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவது யார் என்ற கேள்வி எழுந்தது. அவருக்கு பதில் அவரின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் நடத்துவார் என செய்திகள் வெளியானது. ஒருபக்கம், விஜய் சேதுபதி, சூர்யா, சிம்பு, ஆகியோரிடமும் விஜய் டிவி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது.

அதன்பின் , மருத்துவமனையில் இருந்து விர்ச்சுவல் டெக்னாலஜி மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசனே தொகுத்து வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்துடன் விஜய் டிவி தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் இதற்கு ஒப்புக்கொண்டால் ஒருசில எபிசோடுகள் மட்டும் மருத்துவமனையிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இறுதியில் கமலுக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்நிகழ்ச்சியை நடத்துவார் என்பது உறுதியாகியுள்ளது. இவர் படையப்பா, பாகுபலி உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர். கமலுடன் பஞ்ச தந்திரம் படத்திலும் நடித்தவர். மேலும், விஜய் டிவியிலும் சில நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version