சினிமா செய்திகள்

முதல் நாளே சிபியை வறுத்தெடுத்த ரம்யா கிருஷ்ணன்: அக்சரா செம ஹேப்பி!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முதல் முறையாக ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய நிலையில் முதல் நாளே அவர் சிபியை வறுத்தெடுத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்பதால் ரம்யா கிருஷ்ணன் நேற்று தொகுத்து வழங்கினார். முதலில் அவர் போட்டியாளர்கள் அனைவரையும் குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.

அதன் பின்னர் அக்சரா மற்றும் சுஒஉ இடையே நடந்த சண்டை குறித்த பிரச்சினையை தொடங்கினார். அக்சரா தன்னிலை விளக்கம் கூறியபோது தன்னை வேண்டுமென்றே டார்கெட் செய்து சிபி துன்புறுத்தியதாகவும் அதனால்தான் தான் அழுக நேரிட்டது என்றும் கூறினார்.

இதுகுறித்து சிபி விளக்கம் அளித்தபோது தான் யாரையும் டார்கெட் செய்யவில்லை என்றும் தனக்கு கொடுத்த கேரக்டரைத்தான் செய்ததாகவும் கூறினார். ஆனால் சிபியை அடுத்தடுத்து மடக்கி மடக்கி கேள்வி கேட்டு ரம்யா கிருஷ்ணன் அவரை வறுத்தெடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அக்சராவுக்கு செம ஹேப்பி என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி சிபிக்கு ஒரு குறும்படத்தையும் போட்டுக் காட்டி அவர் செய்த தவறையும் அவர் சுட்டிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய முதல் நாளில் ரம்யா கிருஷ்ணன் ஜாலியாகவும் கலகலப்பாகவும் ஒரு சில இடங்களில் மட்டும் கொஞ்சம் கறாராகவும் நிகழ்ச்சியை நடத்தினார் என்பதும் கமல்ஹாசன் அளவுக்கு இல்லை என்றாலும் அவர் நிகழ்ச்சியை நடத்திச் சென்றது சுவராசியமாக இருந்ததாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version