தமிழ்நாடு

ராம்குமார் வழக்கில் திடீர் திருப்பம்: மின்சாரம் தாக்கியதால் உயிரிழப்பு இல்லையா?

Published

on

நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் மின்சார வயரை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராம்குமார் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க வேண்டுமென அவரது தரப்பினர் மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையில் ராம்குமார் மின்சார வயரை கடித்ததால் உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் கூறிய நிலையில், ராம்குமாரின் திசு பரிசோதனையில் மின்சார வயரை கடித்ததால் அவர் உயிரிழக்கவில்லை என்று தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ராம்குமார் சிறையிலேயே உயிரிழந்துவிட்டதாக சிறையில் உள்ள டாக்டர் சான்றிதழ் அளித்த நிலையில் அவர் சிறையிலிருந்து மருத்துவமனை வரும் வழியில்தான் உயிரிழந்ததாக மருத்துவமனை டாக்டர் சான்றிதழ் அளித்து இரண்டு முரண்பாடாக இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரண்டு முரண்பாடான கருத்துக்கள் தற்போது வெளிவந்துள்ளதை அடுத்து ராம்குமார் மரணத்தில் உள்ள மர்மங்கள் மெல்ல மெல்ல விலகும் என்று கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version