தமிழ்நாடு
ஒட்டுமொத்த வன்னியர்களின் வாக்குகள் அதிமுகவுக்கே: ராமதாஸ் அறிவிப்பு!
அதிமுக கூட்டணிக்கு ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் நீண்ட நாள் கனவு வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தர வேண்டும் என்பது தான். அவர் அதிமுக திமுக என கடந்த பல ஆட்சிகளில் தனது கோரிக்கையை விடுத்த போதிலும் அவரது கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது டாக்டர் ராமதாஸ் அவர்களின் கோரிக்கையை ஏற்று 10.5% உள் இட ஒதுக்கீடு செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதனை அடுத்து டாக்டர் ராமதாஸ் தனது 40 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் பணி அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
கொடுத்தார்கள்… அதனால் மீண்டும் வென்றார்கள்!
வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள்… அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும்’ என்று பதிவு செய்துள்ளார்.
கொடுத்தார்கள்… அதனால் மீண்டும் வென்றார்கள்!
வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள்… அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும்!#TNElections2021
— Dr S RAMADOSS (@drramadoss) February 27, 2021