சினிமா செய்திகள்

தனுஷ்-ஐஸ்வர்யாவை அடுத்து விவாகரத்து பெறும் இன்னொரு பிரபல ஜோடி!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி பரஸ்பரம் பிரிவதாக அறிவித்த நிலையில் தற்போது அதே போன்று இன்னொரு பிரபல ஜோடியும் விவாகரத்து பெற இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ரக்சிதா என்பதும் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் புகழ் பெற்ற இவர் தற்போது பிரிவோம் சந்திப்போம், நாச்சியார்புரம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நாச்சியார்புரம் தொடரில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரக்சிதா திருமணத்திற்கு பின்னரும் தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக இருக்கிறார். ஆனால் கணவர் தினேஷுக்கு தொடர்களில் நடிக்க அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாகவும் தற்போது இருவரும் தனித்தனியே வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருவரையும் சேர்த்து வைக்க நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எடுத்த முயற்சியும் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரக்சிதா, தினேஷ் ஆகிய இருவரும் விரைவில் விவாகரத்து செய்வது குறித்த முடிவை எடுப்பார்கள் என்று கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version