இந்தியா

ராஜ்யசபா தேர்தல்: மனுதாக்கல் தொடங்கும் தேதி அறிவிப்பு!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது என்பது தெரிந்ததே .

தமிழகத்தில் 6 எம்பி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 3 பதவிகள் திமுகவும் ஒரு பதவியில் காங்கிரஸ் கட்சியும் 2 பதவிக்கு அதிமுகவும் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் விரைவில் அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் தேர்தல் ஆணையம் மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன்படி மே 24 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் மே 31-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடையும் என்றும் ஜூன் மூன்றாம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி தேதி என்றும் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version