டிவி

பிக்பாஸ் டைட்டில் வென்றார் ராஜு..!

Published

on

பிக்பாஸ் சீசன் 5 தமிழ் பட்டத்தை ராஜு வென்றுள்ளார்.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு ராஜு, பிரியங்கா, அமீர், பாவனி மற்றும் நிரூப் ஆகியோர் தகுதி பெற்றனர் என்பதும் இந்த ஐவரில் ஒருவர் டைட்டில் பட்டம் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக நிரூப் வெளியேற்றப்பட்டதை அடுத்து நால்வரில் ஒருவர் டைட்டில் பட்டம் வெல்வார் என்று கூறப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் அதன் பின் இரண்டு போட்டியாளர்கள் வைல்டு கார்டு போட்டியாளர்களாக இணைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தமுள்ள 20 போட்டியாளர்களில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டனர் என்பதும் ஒரே ஒரு வாரம் மட்டும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அது ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இறுதி வரையில் வீட்டிலிருந்து ராஜு மற்றும் பிரியங்கா இருவரில் ராஜூ பட்டத்தை வென்று 50 லட்சம் ரூபாய் பரிசையும் பெற்றார்.

seithichurul

Trending

Exit mobile version