சினிமா செய்திகள்
ராஜூவா? பிரியங்காவா?: பிக்பாஸ் டைட்டில் வின்னர் அறிவிப்பு!
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் அதன் பின் இரண்டு போட்டியாளர்கள் வைல்டு கார்டு போட்டியாளர்களாக இணைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தமுள்ள 20 போட்டியாளர்களில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டனர் என்பதும் ஒரே ஒரு வாரம் மட்டும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு ராஜு, பிரியங்கா, அமீர், பாவனி மற்றும் நிரூப் ஆகியோர் தகுதி பெற்றனர் என்பதும் இந்த ஐவரில் ஒருவர் டைட்டில் பட்டம் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக நிரூப் வெளியேற்றப்பட்டதை அடுத்து நால்வரில் ஒருவர் டைட்டில் பட்டம் வெல்வார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இதில் ராஜு டைட்டில் பட்டத்தை வென்றார் என அறிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இரண்டாவது இடம் பிரியங்காவுக்கும், 3வது இடம் பாவனிக்கும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜூ தான் டைட்டில் பட்டத்தை வெல்வார் என்று கூறப்பட்டாலும் திடீரென பிரியங்காவுக்கு வாக்குகள் அதிகமானதாகவும் அதனால் அவர் டைட்டில் பட்டம் பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போலவே ராஜூ டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப் பட்டார் என்பதும் அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சி இன்று மாலை 6 மணி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
WINNER of this #Biggbosstamil5 season is #RajuJayamohan #biggbosstamil #Raju pic.twitter.com/ylRPAS6i7O
— Imadh (@MSimath) January 15, 2022
#Priyanka Runner up????????????????????????#biggbosstamil #Biggbosstamil5 pic.twitter.com/HKDphafIV7
— Imadh (@MSimath) January 15, 2022