சினிமா செய்திகள்

சின்னப்பொண்ணுவுக்கு டிஸ்லைக் போட்டு கருத்து கூறிய ராஜூ ஜெயமோகன்: சூடுபிடிக்கும் பிக்பாஸ்

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாடகி சின்னப்பொண்ணுவுக்கு சக போட்டியாளர் ராஜூ ஜெயமோகன் இரண்டாவது நாளே டிஸ்லைக் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் புரமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பாடகி சின்னப்பொண்ணு தனது சொந்தக் கதை, சோகக் கதையைக் கூறிய நிலையில் அதனை அடுத்து பேச வந்த சக போட்டியாளர் ராஜூ ஜெயமுருகன் கலைஞர்கள் எப்போதுமே தங்களுடைய சொந்த கதையை வெளியே சொல்லி பார்வையாளர்களை அழ வைக்க கூடாது என்றும் அதே நேரத்தில் கலைஞர்களை பார்த்து பார்வையாளர்கள் சிரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் சின்னப்பொண்ணு அவர்களின் பாடலில் இருந்த எனர்ஜி அவரது சோக கதையில் இல்லை என்றும் அதனால் அவருக்கு நான் டிஸ்லைக் கொடுக்கிறேன் என்றும் யாரும் கைதட்டி நம்மை முன்னேறு முன்னேறு என்று சொன்னால் நம்மால் முன்னேற முடியாது என்றும் நாம்தான் இடையில் உள்ள சுவரை உடைத்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்றும் அப்படி ஒருவராக நான் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜூ ஜெயமோகன் டிஸ்லைக் போட்டதை சின்ன பொண்ணு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது அவரது பேச்சிலிருந்து தெரியவந்தது. மொத்தத்தில் ராஜூ ஜெயமோகன் இன்றைய நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மத்தியில் ஸ்கோர் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version